நாட்டில் இனி விமான பயணத்தில் ‘இது’ கட்டாயமில்லை – போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முகக்கவசம்:
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு மீண்டு வருகின்றன. இருப்பினும் அவ்வப்போது கொரோனா வைரஸ் ஆனது பல்வேறு வகைகளில் உரு மாற்றம் அடைந்து முன்பை விட வீரியமிக்கதாக பரவும் அபாயமும் ஏற்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல்,கை கழுவுதல் மற்றும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையானது 4,41,28,580 ஆக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதமும் 1.1 9% ஆக சரிந்துள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், விமான பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறைந்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் பயணிகள் முகக்கவசம் அணிவது அவர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது .அதனால் பயணிகள் முகக்கவசம் அணிவதே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளது.