கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு மீண்டு வரும் டெல்லி – திறக்கப்படும் பள்ளிகள்!!
நம் நாட்டின் தலைநகரான டெல்லி கடும் காற்று மாசுபட்டால் அவதிப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பயனால் தற்போது ஓரளவுக்கு அங்கு காற்றின் தரம் சீராகி வருகிறது.
காற்று மாசுபாடு:
சமீப காலமாக அனைத்து செய்திகளிலும் டெல்லி காற்று மாசுபாடு தான் பேசுபொருளாகி உள்ளது. இதனால் டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி பட்டாசு வெடித்ததால் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்படைந்தது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் அங்குள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்ற டெல்லி அரசு உத்தரவிட்டது. இவ்வாறு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால் டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு உள்ளது.
தங்கம் விலை அதிரடி உயர்வு.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் இன்றைய விலை நிலவரம்!
Exams Daily Mobile App Download
அதன்படி நேற்று AQI அளவின் படி காற்றின் தரம் 363 ஆக இருந்த நிலையில் இன்று 316 ஆக மாறியுள்ளது. இதனால் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மீண்டும் ஆரம்ப பள்ளிகளை திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.