அட பாவிகளா.. இப்படி ஒரு ட்விஸ்ட்டா? ராமமூர்த்தி இறப்பால் நின்று போன கோபி ராதிகா திருமணம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி, கோபி ராதிகா கல்யாணத்தை நிறுத்த மண்டபத்தை தேடி வருகிறார். அப்போது அவரை அவமானப்படுத்தி கோபி அனுப்ப, அதனால் மன உளைச்சலில் இருந்த ராமமூர்த்தி நெஞ்சு வலி ஏற்பட்டு இறப்பது போல காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதனால் கோபி திருமணம் பாதியிலேயே நிற்க இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபி தன் குடும்பம் வேண்டாம் எனவும் ராதிகாவை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என நினைத்து பல வேலைகளை செய்கிறார். இந்நிலையில் அவர் நினைத்தது போல திருமண மேடை வரை வந்துவிட்டார். ஆனால் அதில் புதிய திருப்பமாக கோபி திருமணத்திற்கு பாக்கியா சமைக்க இருக்கிறார். தான் சமைக்க வந்தது கோபி திருமணத்தில் தான் என தெரிந்தும் கூட பாக்கியா வேலை முக்கியம் என முடிவு செய்கிறார்.
மறுபக்கம் ராமமூர்த்தி கோபி ராதிகாவின் திருமணத்தை நிறுத்த நினைக்கிறார். ஆனால் கோபி அப்பா என பார்க்காமல் ராமமூர்த்தியை அவமானப்படுத்தி தள்ளி விடுகிறார். பாக்கியா அதை பார்த்து தன்னுடைய மாமனாரை அழைத்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மகன் இவ்வளவு பெரிய அசிங்கத்தை செய்கிறான் என ராமமூர்த்தி மன உளைச்சலில் இருந்து, அவருக்கு நெஞ்சுவலி வருகிறது. இது இரண்டாவது முறை என்பதால் மருத்துவரால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
நீ என்ன என் பொண்ணா? இனியாவை கேள்வி கேட்ட கோபி.. அதிர்ச்சியில் உறைந்த மொத்த குடும்பம்!
Exams Daily Mobile App Download
அவர் மரணம் அடைய, அந்த செய்தியை கேட்டு கோபி ராதிகா திருமணம் நிற்கிறது. தன்னுடைய உயிரை கொடுத்து பாக்கியா வாழ்க்கையை காப்பாற்ற நினைத்ததால், பாக்கியா அதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார். மேலும் இனியா தாத்தாவின் இந்த நிலைமைக்கு அப்பா தான் காரணம் என சொல்லி கதறி அழுகிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. எப்படியோ கோபி ராதிகா திருமணம் நின்றதால் அடுத்து கதை எப்படி கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்