தமிழக பள்ளிகளின் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கல்வித்துறையின் கீழ் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அதில் சேதாரம் இருந்தால் அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
கல்வித்துறை கட்டிடங்கள்
தமிழகத்தில் பள்ளிக்கூட கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே பள்ளிக் கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். தரமில்லாத கட்டிடங்கள் இருக்கும் பள்ளிகளை மூட அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கல்வித்துறை சார்ந்த கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து புதிய அறிவிப்பை அமைச்சர் ஏ.வ.வேலு வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதன் படி கோயம்புத்தூர் மண்டலத்தில் பொதுப் பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தொடர்பாக, பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் பற்றி துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் கல்வித் துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுப் பணித் துறையால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவத் துறை பணிகளை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் விரைவாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரிகளின் விடுதி கட்டடங்கள் வணிக வரி மற்றும் பதிவுத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, சட்டத் துறை, போக்குவரத்துத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, பள்ளிக் கல்வித் துறை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.