TNPSC Group 2, 2A தேர்வெழுதியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Cut-Off எவ்வளவு தெரியுமா?
TNPSC குரூப் – 2 தேர்வு கடந்த வாரம் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில் Cut-Off மதிப்பெண் எவ்வளவு என்பதற்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்த காரணத்தினால் ஏராளமானோர் தேர்வாக வாய்ப்பிருக்கிறது.
குரூப் – 2 தேர்வு:
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 முதலிய தகுதித்தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக குரூப்-2 தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தான் குரூப்-2 தேர்வின் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. குரூப்-2 தேர்வில் மொத்தமாக 5,529 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு 11,78,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
LPG சிலிண்டர் மானியம் பெறுபவர்கள் கவனத்திற்கு – எவ்வளவு பணம் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 9.94 லட்சம் பேர் மட்டுமே குரூப்-2 தேர்வை எழுதியுள்ளனர். ஜூன் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. குரூப்-2 தேர்வை 14000 மாற்றுத் திறனாளிகளும் எழுதியுள்ளனர். மேலும் மாற்று திறனாளிகளுக்கு மட்டும் தனியாக தேர்வு வைத்து பணியிடங்கள் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த ஆண்டு குரூப்-2 மிகவும் எளிமையாகவே இருந்தது. இத்தேர்வின் கடினநிலையை பொறுத்து தான் Cut-Off முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 80,000 பேர் வரைக்கும் Cut-Off மதிப்பெண் எடுக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் மதிப்பெண் மற்றும் பிரிவின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.