டிச.25 முதல் இரவு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
டிச.25 முதல் இரவு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் அமல் - மாநில அரசு அறிவிப்பு!
டிச.25 முதல் இரவு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் அமல் - மாநில அரசு அறிவிப்பு!
டிச.25 முதல் இரவு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் வெகு வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று காரணமாக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இரவுநேர ஊரடங்கு அமல்:

இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் அடியெடுத்து வைத்த உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் இதுவரை கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் உத்திரபிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 350க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் தொற்று மிகவும் வீரியம் மிக்கதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jio, VI, Airtel ரூ.200க்குள் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

அதனால் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவைப்பட்டால் பாதிப்புகளின் அடிப்படையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவை பொறுத்தவரை ஓமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளாக டில்லி, மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் டில்லியில் தற்போது இரவுநேர ஊரடங்கு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஓமைக்ரான் தொற்று பதிவாகாத மாநிலமான மத்தியபிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அப்போது பொது மக்கள் வெளியில் வரக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சுமார் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் அனுமதி வழங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இன்று (டிச.24) முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அதனை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் இதுவரை 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். ஏற்கனவே ஓமிக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!