Amazon Prime பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – டிச.13 முதல் சந்தா கட்டணம் உயர்வு!
நாட்டின் முன்னணி ஆன்லைன் வணிக சேவை நிறுவனமான அமேசான் தனது பிரைம் சந்தாவிற்கான மாதாந்திர மற்றும் வருடாந்திர விலையை அதிக அளவில் உயர்த்தி இருக்கிறது. இது குறித்த தகவல்களை தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
விலை உயர்வு அறிவிப்பு:
அமேசான் நிறுவனம் நாட்டின் ஆன்லைன் வணிக சேவையில் முன்னணி வகிக்கிறது. அதில், பிரைம் என்ற சிறப்பு சந்தா உறுப்பினர்கள் வசதி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, பிரைம் உறுப்பினர்களுக்கு வழங்கும் சேவையின் மதிப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரைம் ஷாப்பிங், சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு போன்ற அனைத்து வகையான நன்மைகளையும் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பிரைமை இன்னும் மதிப்புமிக்கதாக மாற்றுவதற்காக தொடர்ந்து முதலீடு செய்வதாக அமேசான் தெரிவித்துள்ளது.
Post Office மாதாந்திர வருமான திட்டம் – 6.6% வட்டி! முழு விபரங்கள் இதோ!
இதனால் அமேசான் பிரைம் சந்தா விலை விரைவில் இந்தியாவில் அதிகரிக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை தனது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அமேசான் பிரைம் மாதாந்திர விலை விரைவில் ரூ.179 ஆக இருக்கும், மேலும் வருடாந்திர சந்தாவை வாங்குபவர்கள் ரூ.1,499 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது வருடாந்திர பிரைம் உறுப்பினர் திட்டம் ரூ.999 விலையில் உள்ளது. இந்த விலை உயர்வானது டிசம்பர் 13 முதல் அமலுக்கு வருகிறது. இதன் அடிப்படையில் ஆண்டு திட்டமானது ரூ.500 விலை உயர்வைப் பெற்றுள்ளது. இதேபோல், மூன்று மாதங்களுக்கான காலாண்டுத் திட்டத்தின் விலை ரூ.459 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி காய்கறிகளும் விற்பனை!
மேலும், அதிகாரபூர்வ அறிவிப்பில் இலவச சோதனை அல்லது உறுப்பினர் காலம் முடிவடையும் நாளிலிருந்து அமேசான் தானாகவே அடுத்த உறுப்பினர் காலத்திற்கு பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய பிரைம் உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் திட்டம் தற்போதைய விலையில் இருக்கும் வரை தங்கள் சந்தாவை தொடரலாம். அமேசான் பிரைமில் தங்கள் தொலைத்தொடர்பு ஒரு பகுதியாக சேர்ந்த விரைவில் விலை உயர்வின் படி தொடர வேண்டியதிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.