தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 3) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதன் எதிரொலியாக 16 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை எதிரொலி:
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளைக்கு தீபாவளி பண்டிகை என்பதால் கனமழை காரணமாக சாலையோர கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாத்த’ படத்திற்கு நயன்தாரா பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
மேலும் 18 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக கடந்த 2 நாட்களில் ஒரு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குக் விடுமுறை வழங்க இருப்பதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்றும் கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தீபாவளிக்கு பின் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் தகவல்!
அதன் படி தொடர்மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், நாகை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.