1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தீபாவளிக்கு பின் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் தகவல்!
வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு பின்பாக நவ.4ம் தேதிக்கு மேல் 1 முதல் 7ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என ஒடிஷா மாநில பள்ளி அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஷ் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் கொரோனா 2ம் அலை தொற்றுக்கு பிறகு ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 18 மாத இடைவெளிக்கு பிறகு, ஒடிசா மாநிலத்தில் உள்ள 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆரம்பப் பள்ளி வகுப்புகள் வரும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ.6) விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!
இது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய அம்மாநில பள்ளி மற்றும் கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஷ், ‘ஒடிஷா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை தீபாவளிக்குப் பிறகு மீண்டும் துவங்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி (DA) – முக்கிய கோரிக்கை!
மேலும் தீபாவளிக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் இறுதி முடிவு எடுப்பார் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் ஒடிசா மாநிலத்தில் 11 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 21 மற்றும் அக்டோபர் 25ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க அரசு அனுமதி கொடுத்தது. அதே போல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் ஜூலை 26 முதல் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.