தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ.6) விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும், மாணவ செல்வங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தீபாவளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையையும் (6.11.2021) சேர்த்து விடுமுறை வழங்கிடுமாறு பட்டதாரி ஆசிரியர் கழகத்தலைவர் பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
விடுமுறை வேண்டி மனு:
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை அன்று விடுமுறை வழங்கப்பட இருப்பதை அடுத்து, இந்தாண்டு தீபாவளியும், நோன்பு அமாவாசையும் சேர்ந்து 4.11.2021 வியாழன் அன்று வருகிறது. தீபாவளிக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. 5.11.2021, பள்ளி அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் தற்போது விடுமுறை அளித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மதிப்புமிகு ஆணையர் அவர்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் மனதார தெரிவித்து கொள்கிறோம்.
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – இம்மாதம் நடைபெற உள்ள விழாக்கள்!
6.11.2021, சனிக்கிழமை அரசு ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறை என்பதால், தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் அரசு ஊழியர்கள் 7.11.2021, ஞாயிறு விடுமுறையும் சேர்த்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு 8.11.2021 அன்று மிகுந்த சந்தோஷத்துடன் அலுவலகங்களுக்கு வருவார்கள்.
ஆகவே அனைத்துப் பள்ளிகளுக்கும் 6.11.2021, சனிக்கிழமை அன்றும் விடுமுறை அளித்து, ஆசிரியர் பெருமக்களும், மாணவச் செல்வங்களும், தீபாவளியை மிகச் சிறப்பாக குடும்பத்துடன் மகிழ்ந்து கொண்டாடிட வழி வகுத்துத்தருமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.
தாங்கள் அப்பிரச்சினையை காலம் தாழ்த்தாமல், உடனடியாக அணுகி, எங்கள் எல்லோருடைய மனங்களும் மகிழும் வண்ணம் 6.11.202 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை அளிக்க வேண்டும் என்று கனிவுடன் வேண்டுகிறோம்.