நவம்பர் 7 வரை சம்பளத்துடன் விடுமுறை, வேலையில்லா வாரம் அமல் – கொரோனா தடுப்பு!
ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் ஒரு வாரம் முழுவதும் பணியில்லாமல் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
கொரோனா எதிரொலி:
உலகின் மற்ற நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும், இன்னும் ஓரி சில நாடுகளில் மட்டும் தொற்று பரவல் அதிகரித்த நிலையில் உள்ளது. ரஷ்யாவில் சமீப காலமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அக்டோபர் 30ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ஒரே நாளில் 40,251 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பதிவான அதிகமான தொற்று எண்ணிக்கை இது தான்.
தீபாவளிக்கு பேருந்துகளில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – கூடுதல் கட்டணம்! புகார் எண் அறிவிப்பு!
இதனால் ரஷ்யா அதிபர் முக்கிய முடிவுகளை நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக எடுத்துள்ளார். அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அதிபர் புடின் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக அறிவித்தார். மேலும், இந்த நாட்களில் அனைவருக்கும் கட்டாய விடுமுறை அளித்து ஊதியம் வழங்க இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு பிராந்தியங்களின் தலைவர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அரசின் இந்த உத்தரவு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
இந்த கட்டாய விடுமுறை காலத்தில் மக்கள் வீடுகளிலேயே இருந்து கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க உதவுமாறு ரஷ்யா அரசு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ தான் கொரோனா தொற்று பரவலின் மையமாக உள்ளது. இதனால் நகர் முழுவதும், ஊரடங்கு காலத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க வேண்டும். மற்ற அனைத்து கடைகள், பார்கள் மற்றும் உணவகங்களும் திறக்க அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.