தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு தடை நீக்கம் – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் அரசு அலுவலங்களில் பணியாற்றும் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு பெறுவதற்கான தடை நாளை (ஏப்ரல் 27) முதல் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு தடை நீக்கம்:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 15 முதல் 17 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பு நாட்களை பெற்றுக் கொள்ளாத அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் விரும்பும் நேரத்தில் சரண்டர் செய்து தங்களுக்கான பணப்பலனை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஈட்டிய விடுப்புக்கான பணப்பலனை பெற்றுக் கொள்வதற்கு தமிழக அரசு தடை விதித்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த பணப்பலனை பெற முடியாமல் போனது. இந்த நிலையில் ஈட்டிய விடுப்பு பணப்பலனுக்கான தடை நாளையுடன் (ஏப்ரல் 27) முடிவடைகிறது என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் சரண் செய்த பணப்பலன் குறித்த எந்த தகவல்களும், அரசு அனுமதியும் வெளியாகவில்லை. இது அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பணப்பலனுக்கான தனி உத்தரவை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட தலைவர் நித்தியானந்தம், செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமை செயலருக்கு கோரிக்கை மனு ஒன்றை விடுத்துள்ளார். அதில் ‘கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த தடை நாளையுடன் (ஏப்ரல் 27) முடிவடைகிற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை மீண்டும் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.