தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக ஏப்ரல் 24 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 26) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – அரசு அறிவிப்பு!!
அதன்படி ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படி பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட கூடாது. அதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.