தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 26) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விதிகளில் மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிகளை அரசு தெரிவித்துள்ளது. அந்த விதிமுறைகள் அனைத்தும் இன்று (ஏப்ரல் 26) முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த சில வாரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கும், நேற்று முதல் ஞாயிற்று கிழமை ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் போது மட்டும் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற எதற்கும் வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருந்த போதிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. நேற்று ஒரு நாள் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் சில கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று காலை 4 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் கடும் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
அதன்படி சலூன்கள், அழகு நிலையங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. உடற்பயிற்சி, கேளிக்கை கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகளும் மூடப்பட்டுள்ளன. பெரிய கடைகள், வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை. மளிகை, காய்கறி உள்பட கடைகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் இயங்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.