மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
மே மாதம் அரசு பொது விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக 12 நாட்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறை:
இந்த மாதம் அரசு பொது விடுமுறை மற்றும் வார விடுமுறை என 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பண பரிவர்த்தனையில் சிக்கல்கள் காணப்பட்டது. இந்நிலையில் வரும் மே மாதம் மேலும் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறைகளை தவிர வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.
TN Job “FB Group” Join Now
வங்கிகளின் விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, மே மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விடுமுறை பட்டியலில் சில விடுமுறைகள் மாநில அளவில் மட்டுமே அளிக்கப்படும். மற்ற எல்லா மாநிலங்களுக்கும் 5 நாட்கள் விடுமுறை இருக்காது எனவும் விளக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் கடும் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
மே மாதம் வார இறுதி நாளான அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தவிர இரண்டு சனிக்கிழமைகளான மே 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை 4 மணி நேரங்கள் மட்டுமே செயல்படும் என இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.