தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் கடும் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் கடும் ஊரடங்கு அமல் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் கடும் ஊரடங்கு அமல் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் கடும் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் திங்கட்கிழமை (ஏப்ரல் 26) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு இல்லை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இருந்த போதிலும் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் மேலும் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது

TN Job “FB  Group” Join Now

இது குறித்து இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பின் படி,

  • பெரிய கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
  • கொரோனா எதிரொலியாக திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
  • உணவு விடுதிகள் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்.
  • உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதியில்லை.
  • தகவல் தொழில்நுட்ப நிறுவன நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
  • சென்னை உட்பட மாநகராட்சிகளில் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் மூடல் – அரசு அறிவிப்பு!!

  • வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்கு, கூட்ட அரங்குகளுக்கு அனுமதி இல்லை.
  • கோவில் குடமுழுக்குகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
  • வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
  • கிளப், விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு அனுமதி இல்லை.
  • மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர கடைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.
  • அனைத்து அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் ஏசி இன்றி செயல்பட வேண்டும்.
  • திருமணம் மற்றும் அதை சார்ந்த கூட்டங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும், இறுதிச்சடங்கு மற்றும் அதன் கூட்டங்களில் 25 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற்கலாம்.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 4 மணி முதல் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள மற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல் அமலில் இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!