சென்னையில் மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் – மாநகராட்சி ஆணையர்!!
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மாதங்களை விட மே மாதத்தில் உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமடைந்து உள்ளது. இதனால் தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்துள்ளளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – 11 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு!!
ஆணையர் ஆய்வு:
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் ஆய்வு நடத்தினார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. லேசான அறிகுறியுடன் இருப்பவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறி இல்லாமல் இருந்தாலோ, அல்லது லேசான அறிகுறி இருந்தாலோ மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்.
தீவிரம்:
பொதுமக்கள் அதிக அளவில் மருத்துவமனைகளில் கூடுவதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அவசர எண்ணுக்கு அழைக்கலாம். சென்னையில் மே மாதத்தில் தொற்றின் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒரு நாளில் தற்போது 16,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் 25,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்