இந்தியா, இங்கிலாந்து இடையிலான விமான சேவைகள் – ஏப்ரல் 24 முதல் ரத்து!!
நாடு முழுவதும் அதிகரித்துள்ள கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் விமான போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவைகள் ரத்து:
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா நோய்த்தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வந்த சூழலில் மீண்டுமாக விமான சேவைகள் துவங்கியது. தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை முழு நாட்டையும் தாக்கி கொண்டிருக்கிறது. இதனால் மீண்டுமாக இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து மக்கள் இந்தியா வருவதற்கு இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அரசு வெளியிட்ட, தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் ரெட் லிஸ்ட் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலுள்ள புதிய கொரோனா வைரஸின் வகை இங்கிலாந்தில் உள்ள 100 பேருக்கு மேல் பரவியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கும், இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 24 முதல் 30 ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இது தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு கட்டண விவரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.