ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ரூ.1,500 நிதியுதவி – மாநில முதல்வர் அறிவிப்பு!!
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி, புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் நாடு முழுவதும் தீவிர நோய் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நேற்று நடத்திய பேச்சவார்த்தையில் முழு ஊரடங்கு பிறப்பிப்பது கடைசி ஆயுதம் மட்டுமே என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல மாநிலங்களிலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!
ஊரடங்கு:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அவசிய தேவையின்றி வெளியே வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
நிதி உதவி:
ஊரடங்கினால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு நிதி உதவி வழங்க அரசு ரூ.107 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 7,15,000 ஓட்டுனர்களுக்கு ரூ.1,500 நிவாரணம் கிடைக்கும். இந்த தொகையானது ஓட்டுனர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்த நிவாரணம் போதாது என்றும் ரூ.5,000 நிதி உதவி வேண்டும் என்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்