நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் நாடு முழுவதும் கிடுகிடுவென அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிப்பது, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அவசர ஆலோசனை:
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அனைத்து தொழில் துறைகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. எனவே நாளடைவில் கொரோனா பரவல் நிலவரத்தை பொறுத்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர். தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 8 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அனுமதி!!
இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவத் தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 1.93 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை 1,16,82,136 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் தினசரி 80 சதவீத பாதிப்பு மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
மேலும் வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் கொரோனா வைரஸின் 2வது அலை புதிய உச்சத்தை அடையும் என ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சரவை, சுகாதார செயலாளர் மற்றும் நிதிஆயோக் உறுப்பினர் ஆகியோர் காணொளிக்காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இன்று முதல் இரவு & வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
தற்போது பல்வேறு மாநில அரசுகள் கொரோனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்து இரவு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் 6 – 14ம் தேதி வரை முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.