தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஏஐசிடிஇ வெளியீடு!!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கான அங்கீகாரம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
ஏஐசிடிஇ அறிவிப்பு:
2020-2021-ம் கல்வியாண்டில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழங்கள் என 500 பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளது. அந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ சார்பில் வழங்கப்படும் சில நெறிமுறைகள் அடிப்படையில் அங்கீகாரம் பெற வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் குறித்து ஏஐசிடிஇ செயலர் ராஜீவ்குமார் வெளியிட்ட அறிவிப்பின் படி, “2021-22 ஆம் கல்வியாண்டில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் மாதம் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!
தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான காலஅவகாசம் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை கல்லூரிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.