தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!

1
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மூடப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் பல தனியார் பள்ளிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டு அதனை சரி செய்யும் நோக்கில் மாணவர் சேர்க்கையை தொடங்கினர். அனால் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் சற்றும் குறையாத காரணத்தினால் தனியார் பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை வழங்கப்படக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

இன்று முதல் இரவு & வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!

ஆனால் பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை வழங்குவதாக புகார் வந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதால் மாணவர் சேர்க்கை மூலம் வருமானம் ஈட்ட தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பிரபலமான சில முன்னணி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக கூட்டம் அலைமோதுகிறது என தகவல் வெளிவந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!