தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற நிலையில், அடுத்த கல்வியாண்டில் ஆவது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழக கல்வித்துறையில் ஊரடங்கு காலத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. பின்னர் உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் முடிவில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!
அதன்படி கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. பிற மாநிலங்களில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அது தொடர்பாக எந்த ஒரு முடிவும் இறுதி வரை எடுக்கப்படவில்லை. ஆன்லைன் வழி கல்வி தொடர்ந்து நடைபெற்றது.
PF வாடிக்கையாளர்கள் இருப்பு தொகை – ஆன்லைனில் அறிந்து கொள்ள வழிமுறை!!
பின்னர் 12ம் வகுப்பு தவிர பிற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் தற்போது வரை 10ம் வகுப்பிற்கு மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிடுவது? என்பது குறித்த விபரங்களை வெளியிடவில்லை. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே முந்தைய கல்வியாண்டில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களின் கற்றல் நிலை கேள்விக்குறி ஆகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பிற்கு மே 3ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்து வருகிறது. மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளும் பள்ளிகளில் நடைபெறுகிறது. தற்போது வரை ஆன்லைன் வகுப்புகளே தொடர்ந்து நடைபெற்று வருவதால், அடுத்த கல்வியாண்டிலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவது சந்தேகமே என கூறப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகள் மூடல் & தியேட்டர்களில் கட்டுப்பாடுகள் – மாநில அரசு உத்தரவு!!
இது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், கடந்த கல்வியாண்டு முழுவதும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத காரணத்தால் அவர்களுக்கு கற்றல் மீதான ஈடுபாடு குறைந்துள்ளது. இதனால் அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு தொடங்கினால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் சுழற்சி முறை வகுப்புகளை நடத்தலாம் எனவும் கூறியுள்ளனர்.
1to8 class varukera June month open Satya vantum
Comedy panna theega da 🤣🤣🤣
கல்வியை கேள்வி குறியாக மாற்றி விட்டீர்கள் அப்பறம் என்ன