பள்ளி, கல்லூரிகள் மூடல் & தியேட்டர்களில் கட்டுப்பாடுகள் – மாநில அரசு உத்தரவு!!
நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் பல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை மக்கள் அனைவரும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று:
கடந்த ஆண்டு முதல் இந்திய நாட்டு மக்களை மிக அதிகமாக பாதித்து வருகிறது கொரோனா நோய்த்தொற்று. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது. தற்போது தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் 2வது அலை வீசி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் பல தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்லைனில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை – எளிய வழிமுறைகள் இதோ!!
அந்த வகையில் தற்போது கர்நாடக மாநில அரசு கொரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி மற்றும் வித்யகாம வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 10 மற்றும் பியூ கல்லூரி வரை நேரடி வகுப்புகள் தொடரும் என்றும் அதற்கு மாணவர்களின் வருகை கட்டாயமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்வு நடக்கும் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ அறிவியல் படிப்பிற்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பொது நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களும் பிற பகுதியில் இருக்கும் நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டுள்ளது. மாநிலங்களில் ஊர்வலம் மற்றும் போராட்ட அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் போன்ற புனித தலங்களுக்கு தனிமனித வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அனைத்து வகை பேருந்துகளில் இருக்கைகளுக்கு தகுந்தாற் போல் பயணிகளை அனுமதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு Work From Home வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பெங்களூரு, பெங்களூரு புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் தியேட்டர், உணவகம், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு 50 சதவீத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம் – கல்வித்துறை ஆலோசனை!!
அவர்கள் அனைவரும் கட்டாய முறையில் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் ஊழியர்கள் அனைவரும் சானிடைசர், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மீறினால் நிறுவனம், கடைகள் மூடப்படும். மேலும் மக்கள் விழாக்களில் கூடுவதற்கு தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முகக்கவசம் அணியாதவர்கள் போன்றவர்கள் தற்போது விதிக்கப்படும் அபராதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.