நாட்டில் 9 நாட்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அறிவிப்பு!
உலகில் உள்ள சீனா நாட்டில் உள்ள ஷாங்காய் நகரில் 9 நாட்கள் அரசின் சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கு:
நமது நாட்டின் அண்டை நாடான சீனாவில் உள்ள முக்கிய நகரான வூகான் பகுதியில், சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் இந்த தொற்று சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள்..!
இதற்கிடையே, சீனாவின் மற்றொரு பெரிய நகரமான, ஷாங்காயில், மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
இந்நிலையில் ஷாங்காயில் நேற்று 3,500 ஆக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, இன்று 4,477 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இன்று கொரோனா தினசரி பாதிப்பு 6,886 ஆக அதிகரித்துள்ளது. எனவே தற்போது மீண்டும் 9 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்க இருப்பதாக அரசின் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது. இதனால் பொது மக்கள் பெருகி வரும் கொரோனா தொற்றை நினைத்து மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.