தமிழகத்தில் 800 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் இந்த வார இறுதியில் விடுமுறை மற்றும் அதிக முகூர்த்தங்கள் வருவதால் மக்கள் அதிக அளவு பயணங்களை மேற்கொள்வார்கள். இதற்காக போக்குவரத்து துறை முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் திருவிழா, பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவு மக்கள் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் பேருந்து, ரயில் போன்ற அனைத்து வழி போக்குவரத்தும் அதிக கூட்ட நெரிசலுடன் இருக்கும். இதற்காக தமிழக போக்குவரத்து கழகம் கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு – 13,000 பேருக்கு பணி உறுதி.. மாநில பள்ளிக்கல்வித்துறை உறுதி!
இந்த வாரம் ஜூலை 8 இரண்டாம் சனிக்கிழமை மற்றும் 9ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் சென்னையில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் அதிக மக்கள் பயணிக்க உள்ளார்கள். இதனால் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களை 400 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
முன்பதிவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்ட்டுள்ளனர்.