70% ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம் – ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் CEO வெளியிட்ட முக்கிய பதிவு!
இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான GoMechanic அண்மையில் நிதி மோசடி பிரச்சனையில் சிக்கிக்கொண்டது. இது குறித்து அந்நிறுவனத்தின் CEO லிங்கிடுஇன் தளத்தில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஊழியர்கள் பணி நீக்கம்:
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு நிறுவிய பொருளாதார மந்த நிலையால் ஐடி துறை முதல் பல நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைக்க முற்பட்டது. இதற்கான நடவடிக்கையாக முதல் கட்டமாக ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. மெட்டா, பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஊழியர்கள் வேலை நீக்கம் அதிக அளவில் இருந்தது. அந்த வகையில் சிகோயா இந்தியா முதலீட்டில் இயங்கும் GoMechanic ஸ்டார்ட்அப் நிறுவனம் 70% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அண்மையில் இந்த நிறுவனம் நிதி கணக்கில் ஏற்பட்ட பிரச்சனையால் முதலீடுகளை ஈர்க்க முடியாமல் சரிந்தது.
தமிழகத்தில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனைக்கு தடை – அரசின் அதிரடி நடவடிக்கை!
இது குறித்து பேசிய நிறுவனத்தின் CEO அமித் பாசின் எங்கள் நிறுவனத்தின் செய்யப்படும் வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சினையை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து வருகிறோம். நிதி நிர்வாகத்தில் நங்கள் கடுமையான தவறுகளை செய்தோம். தற்போது நிதி அறிக்கை தொடர்பாக நாங்கள் செய்த தவறுகளுக்கு மிகவும் வருந்துகிறோம் என்று Linkedin தளத்தில் பதிவிட்டுள்ளார்.