தமிழகத்தில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனைக்கு தடை – அரசின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் மெடிக்கல் கடைகளில் மருத்துவரின் உரிய மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
மருந்து விற்பனை:
தமிழகம் முழுவதும் மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துவரின் மருந்து சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் முன்னதாகவே உள்ளது. ஆனால் ஒரு சிலர் தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து நிலையங்களில் தாங்களாகவே சொல்லி மாத்திரைகளை வாங்கிக் கொள்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும் என்று மருந்துகள் கட்டுப்பாடு துறை அடிக்கடி மருந்து விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
ஆதார் கார்டை புதுப்பிக்க ஆவணங்கள் தேவையில்லை – UIDAI வெளியிட்ட புதிய அப்டேட்!
அந்த வகையில், தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்து கடையில் உரிய மருந்து சீட்டு இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள் அதிக அளவில் வாங்கி விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் முறையற்ற பயன்பாட்டை தவிர்க்க மருத்துவரின் சீட்டு இல்லாமல் விற்பனை செய்ய கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் படி சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது.