மதுரை ஆவினில் 62 காலியிடங்கள் பணி நியமனம் – வழக்கு தள்ளுபடி!!
ஆவின் நிறுவனம்:
ஆவின் நிறுவனம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை மையம் ஆகும். தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் ஆவின் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மதுரை ஆவின் மையத்தில் 62 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்தது.
சுயநிதி கல்லூரிகள் கல்விக்கட்டணத்தை தீர்மானிக்கலாம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!!
நியமன முறைகேடுகள்:
இந்த காலிப்பணி இடங்கள் பணம் பெற்று கொண்டு முறைகேடாக நிரப்பப்பட்டதாகவும், இதில் ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் கணேசன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும், முறைகேடு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மதுரை ஆவினில் உள்ள காலிப்பணி இடங்களை முறையாக அறிவித்து விண்ணப்பித்தோர் பட்டியல், தேர்வுக்கான விடைக்குறிப்பு போன்றவற்றை வெளியிட்டு காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனு தள்ளுபடி:
உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் ஆஜராகி, பணி இடங்களுக்கான அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டு, தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. இதற்கான நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு ஜனவரி 8ம் தேதி முதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை பொதுநல மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்