மாரடைப்பு கணிக்கும் 6 அறிகுறிகள்..! தெரிந்துகொள்ளுங்கள்..! உஷாரா இருங்கள்..!
இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்க கூடிய நோய் ஆகும். இத்தகைய, நோயின் அறிகுறி தோன்றியும் அதை மனிதர்கள் அறியாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காலப்போக்கில் அது மனிதர்களின் உயிரை பறித்துவிடுகிறது . அத்தகைய, கொடிய நோயான மாரடைப்பு பற்றி 1 மாதத்திற்கு முன்பே தோன்றும் முக்கிய 6 அறிகுறிகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
6 மாரடைப்பு அறிகுறிகள்:
1.மயோக்ளினிக் அறிக்கையின் படி மாரடைப்பு ஏற்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே மார்பை சுற்றி பல்வேறு வலிகள், மார்பு இறுக்கங்கள், மற்றும் ஒரு அசௌகரியமான உணர்ச்சிகள் தோன்றும்.
2.ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் அறிக்கையின் படி 1 வாரத்திற்கு முன்பு சோர்வுகள் ஏற்பட ஆரம்பிக்கும். பெரும்பாலும் இந்த அறிகுறி ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் தோன்றும் என்று கூறப்படுகிறது.
3. இதயத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிப்பதால் நோயாளிகளுக்கு அதிகம் வியர்க்க ஆரம்பிக்கிறது. இதை சில நபர்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துவிடுகிறார்கள். ஆனால், இந்த அறிகுறி இதயத்திற்கு போகும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும் விதமாக இருக்கும். மேலும் சில பேருக்கு குமட்டல் மற்றும் அஜீரணம் இருக்கும்.
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
4.இதயத்திற்கு போகும் ரத்தம் சீராக இல்லாமல் இருப்பதால் சில நேரங்களில் இதய துடிப்பும் கூடுகிறது. இத்தகைய அறிகுறி மாரடைப்பு ஏற்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாகவே தோன்ற ஆரம்பிக்கும் .
5.மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உடல் வலி, மார்பு வலி , கை , கால் போன்ற பல்வேறு பகுதிகளில் வலிகள் ஏற்படும்.
6.மாரடைப்பு அறிகுறியான தலை வலி , தலை சுற்றல் , மார்பு வலி , மூச்சு திணறல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். மேலும், இந்த 6 குறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
























