PLI திட்டத்தில் இதுவரை ₹53,500 கோடி முதலீடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே பி.எல்.ஐ திட்டத்தின் மூலமாக எவ்வளவு முதலீடு கிடைக்கப்பெற்றுள்ளது மற்றும் பிஎல்ஐ திட்டத்திற்கான வளர்ச்சி குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் கூட்டுச் செயலாளர் தற்போது அறிவித்துள்ளார்.
PLI திட்டம்
கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில்(PLI) இதுவரைக்கும் ரூபாய் 53 ஆயிரத்து 500 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேம்பாட்டு துறையின் கூட்டுச் செயலாளர் ராஜுவ் சிங் தாகூர் தற்போது தெரிவித்துள்ளார். அதாவது, இந்த பிஎல்ஐ திட்டத்திற்கான முதலீடு மற்றும் உற்பத்தி சுழற்சியின் முழு திறனை அடையும்போது அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்குள் இந்த பிஎல்ஐ திட்டம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டிருக்கும் என ராஜுவ் சிங் தாகூர் அறிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள சூப்பர் அப்டேட் – Chat Lock .. பாஸ்வோட் கட்டாயம்!
மேலும், இந்த பிஎல்ஐ திட்டம் இதுவரைக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிஎல்ஐ கோரிக்கைக்கு அரசாங்கத்தின் சார்பில் ரூபாய் 2 ஆயிரத்து 874 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரானிக்களுக்கு ரூபாய் 5,300 கோடிக்கும் மேலான முதலீட்டையும், மருத்துவ துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டையும், உணவு பதப்படுத்துதல் பிரிவில் ரூ.6000 கோடி முதலீட்டையும், தொலை தொடர்பு துறையில் ரூ.1200 கோடி முதலீடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.