மாநிலத்தில் புதிதாக 5000 மருத்துவர்கள் நியமனம் – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

0
மாநிலத்தில் புதிதாக 5000 மருத்துவர்கள் நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!
மாநிலத்தில் புதிதாக 5000 மருத்துவர்கள் நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!
மாநிலத்தில் புதிதாக 5000 மருத்துவர்கள் நியமனம் – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு 2023 – 2024 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தது. இதில் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 5000 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்:

இந்தியாவில் மத்திய அரசு கடந்த 1ம் தேதி 2023 – 2024ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ததையடுத்து மாநில அரசுகளும் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த வாரம் சட்ட பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

இதில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்காக மொத்தம் 2.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறைக்கு மட்டும் ரூ. 6,048 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் புதிதாக 5,000 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான சிறந்த Tamil Book Material – மிகக்குறைந்த விலையில்!

அதனை தொடர்ந்து பட்ஜெட்டில், திறமையான மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படும், மேல்நிலைப் பள்ளிகளில் 7,540 நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் போன்ற அறிவிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!