கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,500 கோடி அபராதம்!
பிரான்ஸ் நாட்டின் ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,500 கோடி அபராதம் விதித்துள்ளது. செய்தி ஊடகங்களின் செய்தியை பயன்படுத்தி கோடிக் கணக்கில் லாபம் சம்பாரித்து அந்த வருமானத்தில் செய்தி நிறுவனங்களுக்கு எந்தவித பணமும் அளிப்பதில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம்:
அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் கூகுள் (Google) ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை ஆகும். உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.
ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டும் பிராந்திய மொழிகளில் நடைபெறும் – மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!!
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஆணையம் ஒன்று கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4500 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் தெரிவித்துள்ள விளக்கத்தில், கூகுள் நிறுவனம் தனது தளத்தில் செய்தி ஊடகங்களின் செய்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது. ஆனால் அந்த வருவாயில் செய்தி நிறுவனங்களுக்கு எந்தவித பணமும் அளிப்பதில்லை என தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் ஆணையம் கூறுகையில் கூகுள் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை சரியாக வழங்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் இதுவரை தொகை வழங்காமல் பயன்படுத்திய செய்திகளுக்கு ரூ.4500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த அபராத தொகையை கூகுள் நிறுவனம் எவ்வாறு செலுத்தப் போகிறது என்பதை இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு தெரிவிக்காவிட்டால் தினமும் 8 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு கூகுள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. எங்களது நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள முயற்சிகளை ஆணையம் கண்டுகொள்ளவில்லை எனவும் கோடிக்கணக்கான மக்களை ஊடகங்களில் உள்ள செய்தியை க்ளிக் செய்ய ஊக்குவிக்கிறோம் என்றும் இந்த தீர்ப்பு ஏற்புடையது அல்ல என்று கூகிள் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.