தமிழகத்திற்கு புதிதாக 4,300 அரசு பேருந்துகள்.. ஓட்டுநர், நடத்துநர் காலியிடம் நிரப்பம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் அரசுப்பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் எழுந்த புகார்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
புதிய பேருந்துகள்:
தமிழகத்தில் அரசு இலவசமாக பெண்கள் பயணிக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், பணிக்கும் செல்லும் பெண்கள் எளிதாக பயணம் செய்ய முடிந்தது. இலவச நகர பேருந்து பயணம் காரணமாக கூடுதல் செலவு இல்லாமல் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர்.
ஆனால் இலவச பயணம் காரணமாக போக்குவரத்து துறை நஷ்டத்தில் செயல்படுவதாகவும்,இதனால் கிராம புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி புகார் தெரிவித்து வந்தார்.
எல்லை பாதுகாப்பு படையில் Law Officer ஆக பணிபுரிய வாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்நிலையில், அரசு எந்த நகரப்பேருந்தின் செயல்பாட்டையும் குறைக்கவில்லை என்றும், கூடுதலாக 4,300 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும், அதேபோல், காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
Follow our Twitter Page for More Latest News Updates