மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அடுத்த மாதம் ரூ.4000 – வெளியான சூப்பர் தகவல்!
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்:
விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவி 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 22 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு முக்கிய அறிவிப்பு!
இந்த திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு டிசம்பர் மாதத்திலேயே 4000 ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 10வது தவணையானது விவசாயிகளுக்கு டிசம்பர் 15ம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் 10வது தவணையில் இரு மடங்கு அதாவது 4000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகள் கிசான் கிரெடிட் கார்டுகளை பெறமுடியும். இதில் 3 லட்சம் வரையில் கடன் பெற முடியும். இதற்கு 4% மட்டுமே வட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது.