சென்னையில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மழையை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்து அதிகாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Gallary ல் WhatsApp புகைப்படங்கள் காட்டவில்லையா? சரி செய்யும் வழிமுறைகள் இதோ!
இந்த வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 310 கிமீ தொலைவில் இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையத்தால் தகவல் வெளியிடப்பட்டது. அதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் – முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு!
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து மாணவர்களும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) மாணவர்களின் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.