நவம்பர் 22 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு முக்கிய அறிவிப்பு!
ஆஸ்திரியா நாட்டில் வரும் திங்கட்கிழமை (22.11.2021) முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
கடந்த 2019 ம் ஆண்டு சீனாவின் உகான் மாநிலத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விரைவாக பரவி பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்து அனைத்து நாட்டு அரசுகளுக்கு சவாலான சூழலை உருவாக்கியது. இந்த நிலையில் அந்நாட்டு அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளையும் அச்சுறுத்தியது.
தமிழகத்தில் ஜனவரி 20க்கு பின் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் – உயர் கல்வித்துறை அமைச்சர்!
தடுப்பு பணியின் ஒரு பகுதியாக அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை விதித்து பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியது. கொரோனா வைரஸ் அடுத்தடுத்த நிலைகளா உருவெடுத்து இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தொடர்ந்து பரவியது. இதற்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு 2 டோஸ் மக்களுக்கு செலுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று முழுமையாக குறையவில்லை. மற்ற நாடுகளை தொடர்ந்து தற்போது ஆஸ்திரியாவில் தொற்று அதிகரித்து வருகிறது.
சென்னையில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
இதனால் தடுப்பு நடவடிக்கையாக ஆஸ்திரியா 21 ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் ஷாலான் பெர்க் அறிவித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோயின் தீவிரம் பொறுத்து மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.