தமிழகத்தில் ஜனவரி 20க்கு பின் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் – உயர் கல்வித்துறை அமைச்சர்!
தமிழகத்தில் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் இனி நேரடி முறையில் மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் நடத்த கோரி போராட்டம் நடத்தினர். இதனால் மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் நேரடி தேர்வுகள் 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டிற்கு முன்பு முதல் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் பாதிப்பினால் மாணவர்களின் கல்வி நிலை அதிகம் பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளார்கள். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இதனால் கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவெடுக்கப்பட்டது.
சென்னையில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
அதன்படி, தமிழகத்தில் கடத்த செப்டம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு தவிர அனைத்து நிலை கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை இனி தமிழகத்தில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாக மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்தது. இதன்பிறகு, நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டது. ஆனால் தேர்வு தொடங்கும் நாளன்று மாணவர்கள் எதிர்பாராத விதமாக தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Gallary ல் WhatsApp புகைப்படங்கள் காட்டவில்லையா? சரி செய்யும் வழிமுறைகள் இதோ!
இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி விட்டு, நேரடி தேர்வுகளை நடத்துவதுவதாக அரசு அறிவித்துள்ளது குறித்து மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் முன்னர் தற்காலிகமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அண்ணா பல்கலையும் தேர்வுகளை இரண்டு வாரங்கள் தள்ளிவைத்துள்ளதாக அறிவித்திருந்தது. தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மாணவர்கள் நேரடி தேர்விற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டிருந்தனர். ஆனால் தேர்வுக்கு 2 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்ப பெறப்படும் என்றும் கூறியுள்ளார்