இந்தியாவில் 4 பெரிய ஐடி நிறுவனங்களில் 40 சதவீத வீழ்ச்சி – வெளியான ஷாக் அப்டேட்!
இந்தியாவில் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கும் துறையான ஐடி துறையின் 4 பெரிய நிறுவனங்கள் 2022-23 நிதியாண்டில் வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் 40 சதவீத சரிவை சந்தித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் பல பெரிய நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வகையில் நாட்டின் 4 பெரிய ஐடி நிறுவனங்களான CS, இன்போசிஸ், HCL, விப்ரோ 2022-23 ஆம் நிதியாண்டில் பெரிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் 40 சதவீத சரிவை சந்தித்துள்ளது. மேலும் 10 மில்லியன் டாலர் மற்றும் 100 மில்லியன் டாலர் பிரிவில் இந்த நிறுவனங்கள் 2022-23 ஆம் நிதியாண்டில் 90 வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 132 ஆக இருந்தது.
தமிழகத்தில் துணை போலிஸ் சூப்பிரண்டுக்கான காலிப்பணியிடங்கள் – இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியல் வெளியீடு!
இந்நிலையில் TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ நிறுவனங்கள் பணிநீக்கங்களை வெளியிடவில்லை. இருந்தாலும் செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் பல முயற்சிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனங்களின் 40 சதவீத சரிவு புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை, ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வேரியபிள் பே தொகை அளவீடு, புதிய நிறுவனத்தில் சேர்ப்பவர்களுக்கான சம்பள உயர்வு அளவீடு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.