அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு – விரைவில் அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசின் ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 42% அகப்பிலைப்படி உயர்வு பெற்று வருகிறார்கள். இறுதியாக அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதங்களுக்கு ஏஐசிபிஐ குறியீட்டு தகவல்களின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைக்கான அகவிலைப்படி உயர்வு 3 சதவீதங்கள் உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
அவ்வாறு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 45% அகவிலைப்படி பெறுவார்கள். இதன் மூலம் அடிப்படை ஊதியம் 18 ஆயிரம் ஆக உள்ள அரசு ஊழியர் மாதம் ரூபாய் 540 கூடுதல் ஊதியத்தை பெறுவார். இதன் மூலம் மத்திய அரசின் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழக விவசாயிகளுக்கு மானிய விலையில் ட்ரோன் கருவிகள் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பின்னர் அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.