பள்ளி மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பரிசோதனை தீவிரம்!
மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை சேர்ந்த 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று
இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனா 2ம் அலைத்தொற்று சூழலுக்கு மத்தியில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. என்றாலும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாததால் மாணவர்கள் பலரும் கொரோனா தொற்றின் தாக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையில் ஒமிக்ரான் பரவலும் இந்தியாவில் வேகமெடுத்து வரும் சூழலில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடையே குழப்பமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் மாற்றம் குறித்த முழு விபரங்கள் இதோ!
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 29 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலத்தில் நாடியா பகுதியில் செயல்பட்டு வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் பயின்று வரும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்கள் அனைவரும் 9 மற்றும் 10ம் வகுப்புகளை சேர்ந்தவர்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்? மத்திய அரசு அறிவுறுத்தல்!
இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 29 மாணவர்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சளி, இருமலினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும்படிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பள்ளியை சேர்ந்த மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக துணைப்பிரிவு அதிகாரி கல்யாணி தெரிவித்துள்ளார்.