தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்? மத்திய அரசு அறிவுறுத்தல்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரவுநேர ஊரடங்கு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் குறித்த விபரங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இரவுநேர ஊரடங்கு:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் சில நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழகம், கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்!
இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் மட்டும் 57 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று 2 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொற்று மற்ற கொரோனா வகைகளை விட வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகம் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவும் ஓமிக்ரான் தொற்று – மீண்டும் லாக்டவுன்?
அந்த வகையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. அவர்களது அச்சத்தை போக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தை பொறுத்தவரை இப்போதைக்கு இரவுநேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இல்லை. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்க வாய்ப்பு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.