தமிழகத்தில் வேகமாக பரவும் ஓமிக்ரான் தொற்று – மீண்டும் லாக்டவுன்?

0
தமிழகத்தில் வேகமாக பரவும் ஓமிக்ரான் தொற்று - மீண்டும் லாக்டவுன்?
தமிழகத்தில் வேகமாக பரவும் ஓமிக்ரான் தொற்று - மீண்டும் லாக்டவுன்?
தமிழகத்தில் வேகமாக பரவும் ஓமிக்ரான் தொற்று – மீண்டும் லாக்டவுன்?

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் இதுவரை 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் லாக்டவுன் வரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருக்கின்றனர்.

ஓமிக்ரான் தொற்று:

உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தான் தற்போது ஓய்ந்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் ஏற்கனவே பரவி வந்த கொரோனா வைரஸின் பரிமாண மாற்றம் எனவும், சாதாரண கொரோனா வைரஸ் விட இந்த வைரஸ் அதிகம் பரவும் அபாயம் கொண்டுள்ளது என எச்சரிக்கை அறிவிப்பு வெளியானது. அதனால் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட்டன.

திருப்பதி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

அதன் படி இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஏற்கனவே வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் படி இதுவரை 60 பேருக்கு அறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எனவும், அவர்களுக்கு முதல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 26 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் மதுரையில் 4 பேருக்கும், திருச்சியில் 5, திருவண்ணாமலையில் 2 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதில் 2 பேர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என தெரிவித்துள்ளார். எல்லாரும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

மீண்டும் முழு ஊரடங்கு? இன்று மாலை பிரதமர் தலைமையில் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் அச்சம்!

இன்னும் 24 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வர இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று இடையே பல வித்தியாசங்கள் இருக்கும் எனவும், கொரோனா வந்தால் காய்ச்சல் தலைவலி, அதிகமான காய்ச்சல் இருக்கும். ஆனால் ஓமிக்ரான் தொற்றில் அதே போல சில வேறுபட்ட அறிகுறி இருக்கும் எனவும், ஆனால் இந்த தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதனால் மீண்டும் ஊரடங்கு வருமா என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!