TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் மாற்றம் குறித்த முழு விபரங்கள் இதோ!

0
TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் மாற்றம் குறித்த முழு விபரங்கள் இதோ!
TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் மாற்றம் குறித்த முழு விபரங்கள் இதோ!
TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் மாற்றம் குறித்த முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் TNPSC பாடத் திட்டங்கள், விதிகள் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இது குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

TNPSC:

தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித போட்டித்தேர்வுகளும் நடத்தவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2022ம் ஆண்டு TNPSC தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 2 தேர்வு 2022 பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகும். அடுத்ததாக குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அதிரடியாக உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

மேலும் தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டம், விதிமுறை ஆகியவற்றில் பல ,மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் அதாவது TNPSC தேர்வு விடைத்தாள்கள் எடுத்து செல்லப்படும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரங்கள் தனியாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 4 பாடத்திட்டம், விதிமுறை விவரம்:

குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும்.

மேலும் முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் போன்ற தலைப்புகள் இடம்பெறும். இதில் மொத்த மதிப்பெண் 100 ஆகும். 40 மதிப்பெண் பெறுவது கட்டாயம்.

குரூப் 4:

பகுதி – ‘அ’ என கொள்குறி வகையில் தமிழ்மொழித் தேர்வு வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெறும். அடுத்ததாக பகுதி ஆ வில் பொது அறிவு, திறனறிவு, நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெறும்.

பகுதி – ‘ஆ‘ வில் 40 சதவீத மதிப்பெண் பெறுவது கட்டாயம். 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இதர போட்டித் தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!