2023 வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
உயரிய விருதான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.04) வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு:
ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதார உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு உலகளவில் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது . முதல் கட்டமாக மருத்துவத் துறையில் கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
2023 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
அதனைத் தொடர்ந்து நேற்று பியர் அகோஸ்டினி, பெரென்க் க்ராஸ்ஸ், அன்னே எல்’ஹுல்லியர் ஆகிய மூவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று வேதியியல் துறையில் மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குவாண்ட புள்ளிகளில் கண்டுபிடித்து தொகுத்து ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் டிச. 10ம் தேதி விருதுகள் வழங்கப்படவுள்ளது.