அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வெளியீடு!!
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதன் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.
ஜேஇஇ மெயின் ஏப்ரல் மாத தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம் – என்டிஏ அறிவிப்பு!!
மீண்டும் அதிகரிப்பு:
பள்ளி, கல்லூரிகள் ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு பாடங்கள் நேரடி முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா பரவலின் பரவல் சற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் ஒரு நாளில் பரவிய தொற்றின் எண்ணிக்கை 1200 ஐ கடந்து தற்போது 2000ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுதிகள் விடுமுறை:
கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் வகுப்புகள் நடக்கிறது. இந்நிலையில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலையின் பொறியியல் செய்முறை பயிற்சிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலையின் வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளையும் காலி செய்ய அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்