ஜேஇஇ மெயின் ஏப்ரல் மாத தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம் – என்டிஏ அறிவிப்பு!!
2021ம் ஆண்டிற்கான ஜேஇஇ (மெயின்) தேர்வின் ஏப்ரல் மாத மூன்றாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 4ம் தேதி இறுதி நாளாகும்.
ஜேஇஇ தேர்வு:
மத்திய அரசின் உயர்நிலை பல்கலையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய அரசால் நடத்தப்படுவது தான் ஜேஇஇ தேர்வாகும். ஆண்டு தோறும் இதன் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கமாக ஆண்டிற்கு இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வானது நடப்பு ஆண்டில் இருந்து நான்கு முறை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிப்பு – அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!
நான்கு கட்ட தேர்வுகள்:
பிப்ரவரி 23 முதல் 26 வரையிலும், மார்ச் 15 முதல் 18 வரையிலும், ஏப்ரல் 27 முதல் 30 வரையிலும், மே 24 முதல் 28 வரையிலும் என்று நான்கு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் ஒரு முறையில் இருந்து நான்கு முறை வரை தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில் மாணவர் எடுத்துள்ள அதிகபட்ச மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஏப்ரல் மாத தேர்வு:
ஏப்ரல் மாத தேர்வுகள் ஏப்ரல் 27, 28, 29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை jeemain.nta.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ஏப்ரல் 4ம் தேதி இரவு 11:50 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்