11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் 2 மொழி தெரிந்திருக்க வேண்டும் – புதிய அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக 2 மொழி தெரிந்திருக்க வேண்டும் என புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 மொழி கட்டாயம்:
நாட்டின் புதிய மற்றும் தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது, தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையான இடைநிலை கல்வி பாடத்திட்டங்களை கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பாடத்திட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொழிற் பயிற்சி பாடங்கள், கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை புகட்ட வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசுக்கு ரூ.10000 அபராதம் – ஓய்வூதியம் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு!
இந்நிலையில் தற்போது, 11 மற்றும் 1ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக 2 மொழியாவது தெரிந்திருக்க வேண்டும் என புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பள்ளி மாணவர்கள் மேல் படிப்பை தொடரும்போது பிற நாட்டு மாணவர்களுக்கு இணையாக குறைந்தது இரண்டு மொழிகளையாவது கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு மொழிகளில் கட்டாயமாக ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டியது அவசியம்.