வீட்டு வசதி திட்டம் மூலம் 2.32 லட்சம் வீடுகள் – அமைச்சர் முக்கிய தகவல்!
கர்நாடக அரசு வீட்டு வசதி திட்டத்தில் பயனாளிகளுக்கு 2.32 லட்சம் வீடுகளை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வீட்டு வசதி திட்டம்
கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு 2.32 லட்சம் வீடுகளை வழங்க உள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது இது குறித்து வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், இது குறித்து அமைச்சர் ஜமீர் அகமது கான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இந்த திட்டத்தில் திட்டத்தை நிறைவேற்ற சுமார் ₹8,000 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளார்.
2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
ஹம்பியில் வியாழக்கிழமை நடைபெற்ற கர்நாடக சம்பிரமா நிகழ்ச்சியில், இத்திட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். குடிசைப்பகுதிகள் மேம்பாட்டு வாரியமும், ராஜீவ் காந்தி வீட்டு வசதிக் கழகமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும்,பயனாளிகள் பணம் செலுத்தாததால் பல ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.