மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 18 மாத DA நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகை:
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
உங்களது சிலிண்டர் காலாவதியாகிவிட்டதா? உடனே இப்படி செக் பண்ணுங்க!!
மேலும், வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்குதலை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று தவணையாக அகவிலைப்படியை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மத்திய அரசு 18 மாத கால நிலுவைத் தொகையை விடுவித்தால் கிட்டத்திட்ட 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.